Thursday, June 28, 2012

தொழுகையில் அமரும் சரியான முறை எது?


தொழுகையில் அத்தஹிய்யாத் அமர்வில் அமரும் விதம் பற்றி இருவிதமாக ஹதீஸ்கள் உள்ள.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத்தில் அமர்ந்தால் இடது காலின் மீது அமர்வார்கள் என்று பொதுவாகவும் ஹதீஸ்கள் உள்ளன. தம் இருப்பிடத்தை தரையில் வைப்பார்கள் என்று பொதுவாகவும் ஹதீஸ்கள் உள்ளன.

ஜும்மா நேரத்தில் கடையை மூட வேண்டுமா?



ஜும்மா நேரத்தில் வியாபாரத்தை நிறுத்தாமல் முஸ்லிமல்லாத நபர்கள் மூலமோ ஜும்மா கடமையாகாத பெண்கள் மற்றும் சிறுவர்கள் மூலமோ வியாபாரத்தை தொடர்ந்து கொண்டு தாங்கள் மட்டும் தொழுகைக்கு வந்து விடுகின்றனர். இதுவே அல்லாஹ் நம்மிடம் எதிர்பார்ப்பது என்றும் இவர்கள் கருதுகின்றனர்.
ஆனால் இந்தக் கருத்து முற்றிலும் தவறாகும். இது குறித்து அல்லாஹ் கூறுவது இது தான்
நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டுவிடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
திருக்குர்ஆன் 62:9,10

Monday, June 25, 2012

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை பெண்கள் மறுக்கலாமா?

தனக்குப் பிடித்தவரைக் கணவனாக தேர்வு செய்ய பெண்ணிற்கு இஸ்லாத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. பெண்ணுடைய விருப்பமில்லாமல் நடத்தப்படும் திருமணம் செல்லாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இமாம் மிம்பரில் துஆ செய்யும் போது ஆமீன் கூறலாமா?


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பரில் நின்று பல்வேறு சந்தர்ப்பங்களில் துஆ செய்துள்ளனர். ஆனால் அந்த துஆவைச் செவியுற்ற நபித்தோழர்களை ஆமீன் சொல்லுமாறு கூறவில்லை. நபித்தோழர்கள் ஆமீன் கூறியதாகவும் அதைக் கேட்டு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அங்கீகரித்த்தாகவும் எந்த ஆதாரமும் இல்லை. எனவே இது பித்அத் ஆகும். இது மார்க்கத்தில் உள்ளது என்றால் நபிகள் நாயகம் ஸல் அவர்கள இதைக் கற்றுத்தராமல் இருந்திருக்க மாட்டார்கள். இமாம் மிம்பரில் ஏறிய பின் அவர் கூறுவதை செவி தாழ்த்திக் கேட்பது தான் மக்களின் கடமையாகும்.

Sunday, June 24, 2012

பெருநாள் வாழ்த்து கூறலாமா? கூடாதா?

பெருநாள் வாழ்த்து கூறலாமா? கூறக்கூடாதா?



வாழ்த்து என்றால் அதற்கு அர்த்தம் என்னநீங்கள் நலமாக இருக்க வாழ்த்துகிறேன் என்று கூறினால் உங்களிடம் இறைத் தன்மை இருப்பதாகத் தான் அதன் கருத்து அமைந்துள்ளது.

நீங்கள் நலமாக இருக்க அல்லது மகிழ்வுடன் இருக்க அல்லது கவலைகள் மறக்க அல்லாஹ்விடம் துஆச் செய்கிறேன் என்று கூறினால் இறைவனிடம் ஒரு முஸ்லிம் சகோதரனுக்காக துஆச் செய்யும் பொதுவான அனுமதியில் இது அடங்கும்.
ஆசி வழங்குவது போல் அமைந்துள்ள வாழ்த்துகிறேன் என்ற சொல்லை ஒரு முஸ்லிம் கூற முடியாது. வாழ்த்துகிறேன் என்று நீங்கள் கூறுவதால் அவர் வாழ்ந்து விடுவார் என்று நம்புகிறீர்களாஅப்படி நம்ப முடியாது. நம்பக் கூடாது. ஒரு முஸ்லிமுக்காக துஆச் செய்யலாம் என்ற பொது அனுமதியின் அடிப்படையில் பெருநாள்தினத்திலும் துஆச் செய்யலாம்.

ஸலவாதுன்னாரிய்யா ஓதலாமா?


ஸலவாதுன்னாரிய்யா ஓதலாமா?
தமிழக முஸ்லிம்கள் சிலரிடம் ஸலவாத்துன்னாரியா என்ற ஸலவாத்தை ஓதும் நடைமுறை இருந்து வருகிறது. அதாவது 4444 தடவை இந்த ஸலவாத்தை ஓதினால் ஏழைகள் பணக்காரர்களாகி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இது ஓதப்பட்டு வருகிறது. இந்த ஸலவாத்தின் வாசகங்கள் பெரிதாக உள்ளதால் இதை அனைவரும் மனனம் செய்திருப்பதில்லை. மேலும் 4444 தடவை ஒருவர் இதை ஓதினால் இதற்காகப் பல நாட்களை ஒதுக்க வேண்டிவரும். இதனால் ஆலிம்களை அழைத்து அவர்களுக்கு உரிய(?) கட்டணம் கொடுத்து ஓதச் செய்யப்படுகிறது.
இது மார்க்கத்தில் உள்ளதா என்பதை நாம் அறிந்து கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.

Saturday, June 23, 2012

பாவியாக்கும் பராஅத் இரவு


பாவியாக்கும் பராஅத் இரவு

சூரியன் பொழுதை அடந்ததும் ஒரே பரபரப்பு! முஸ்லிம் வீடுகளில் பெண்கள் விழித்த உடனே மறக்காமல் கணவனிடம், கறி வாங்கிட்டு வாங்க என்று கூறுவதும், பாத்திஹா ஓத முன் கூட்டியே ஹஜரத்திடம் சொல்லி வர ஆளனுப்புவதுமாக வீடு முழுவதும் ஒரே பரபரப்பாகக் காட்சியளிக்கும்.

இது மாத்திரமா? மாலை நேரத்தில் ரொட்டி சுட்டு, வீடு வீடாகக் கொடுப்பதற்காக மாடிக் கட்டடங்கள் போல் அடுக்கப்பட்டிருக்கும். சிலர் நேர்ச்சைக்காக கோழிக் குழம்பு வைப்பார்கள்..

புது வீடு கட்டி சாப்பாடு போடலாமா?

இன்றைக்கு கிரகப்பிரவேசம் என்ற பெயரில் ஏராளமான தவறுகளை நம் சமுதாய மக்கள் செய்துவருகின்றனர். புதுவீட்டுக்கு வந்தவுடன் பால்காச்ச வேண்டும். வீட்டில் ஜமாஅத் தொழுகை நடத்தப்பட வேண்டும். ஃபாத்திஹா ஓதப்பட வேண்டும் என்று பலவிதமான மூடநம்பிக்கைகள் மக்களிடம் காணப்படுகின்றது. இவைகளுக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. 

Thursday, June 21, 2012

பிறந்த நாள் கொண்டாடலாமா?


 பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை. ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் கடைபிடிக்க வேண்டிய சந்தோஷமான துக்கமான காரியங்கள் அனைத்தையும் இஸ்லாம் கற்றுத்தந்திருக்கின்றது. இதில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இஸ்லாம் குறிப்பிடவில்லை. இந்த சமுதாயத்துக்கு பெரும் பாக்கியமாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது பிறந்த நாளை அவர்களும் கொண்டாடவில்லை. கொண்டாடுமாறு மக்களுக்கும் கூறவில்லை. ஏன் நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட நபித்தோழர்களிடையே இப்படிப்பட்ட ஒரு கலாச்சாரம் இருக்கவில்லை.

வரதற்சனை விருந்து , மவ்லிது விருந்து வித்தியாசம் என்ன ?

வரதற்சனை  விருந்து , மவ்லிது விருந்து வித்தியாசம் என்ன ?


அஸ்ஸலாமு அலைக்கும்


மார்க்கத்திற்கு மாற்றமாக நடக்கும் திருமணத்தை முன்னிட்டு தரப்படும் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும் என்று கூறுகிறோம். இத்திருமணத்தை நாம் ஆதரிக்கக்கூடாது என்பதே இதற்குக் காரணம். இத்திருமணத்தை முன்னிட்டு தரப்படும் விருந்தில் பங்கெடுத்துவிட்டு நான் இத்திருமணத்தை ஆதரிக்கவில்லை என்று கூறினால் இந்தக் கூற்றில் எந்த உண்மையும் இல்லை.

Monday, June 18, 2012

பெருகி வரும் கற்பழிப்புக்கு யார் காரணம்



பெருகி வரும் கற்பழிப்புக்கு யார் கார

பெருகி வரும் கற்பழிப்புக்கு யார் காரணம்? முற்போக்கு பெண்கள் வாக்குமூலம்

பெண்கள் அன்னிய ஆண்களைக் கவரும் வகையில் ஆடை அணியக் கூடாது என்று இஸ்லாம் வழி காட்டுகிறது. ஆண்களும் தமது கற்பைப் பேணிக்கொள்ளுமாறு கட்டளை பிறப்பிக்கிறது.

24:30. (முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

வட்டி இல்லா வங்கியே தீர்வு






வட்டி இல்லா வங்கியே தீர்வு

விதர்பா பிரச்சினையைத் தீர்க்க இஸ்லாமிய வங்கியே தீர்வு- எம்.எஸ்.சுவாமிநாதன்

சென்னை: விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை தொடர் கதையாகியுள்ளதைத் தீர்க்க இஸ்லாமிய வங்கி முறை சரியான தீர்வாக அமையும் என்று இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என புகழப்படும் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.

கருணா ரத்னா விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், விதர்பா பகுதியில், வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள் அதிக வட்டிக்குப் பணம் வசூலிப்பதால் அங்குள்ள விவசாயிகள் பெரும் கடனாளியாக மாறியுள்ளனர். இதனால் கடன் தொல்லை தாங்க முடியாமல் அவர்கள் விரக்திக்குத் தள்ளப்பட்டு தற்கொலை முடிவை நாடுகின்றனர்.

Saturday, June 16, 2012

தாடி ஓர் ஆய்வு

தாடி ஓர் ஆய்வு
ஆண்கள் தாடி வைக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளதால் தாடி வைப்பது நபிவழி என்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளனர்..[break] 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

حدثنا محمد بن منهال حدثنا يزيد بن زريع حدثنا عمر بن محمد بن زيد عن نافع عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال خالفوا المشركين وفروا اللحى وأحفوا الشوارب وكان ابن عمر إذا حج أو اعتمر قبض على لحيته فما فضل أخذه


இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்





இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்

கே. முஹம்மத் நாஸிர் உமரீ, பேர்ணாம்பட்டு

ஏப்ரல் மாதம் துவங்கியவுடன் முஸ்லிம்களில் சிலர் பிறரை மதிக்காமல், உரிய கவுரவத்தைக் கொடுக்காமல், அவர்களிடம் பொய் சொல்லி, அதற்குச் சத்தியமும் செய்து நம்ப வைத்து பிறகு ஏமாற்றுவது, ஏளனமாகச் சிரிப்பது, மேலும் அவர்களுக்கு இழிவை ஏற்படுத்துவது போன்ற செயல்களை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள். இவர்கள் பிறரை ஏப்ரல் ஃபூல் - முட்டாளாக்கி அற்ப சந்தோஷத்தை அனுபவிப்பதை பார்க்கிறோம்.

பாங்குக்குப் பின் ஸலவாத் ஓதலாமா?

பாங்குக்குப் பின் ஸலவாத் ஓதலாமா?

பாங்குக்குப் பின் ஸலவாத் ஓத வேண்டும் என்ற ஹதீஸ் பலவீனமானதா?

பாங்குக்குப் பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்ல வேண்டும் என்று ஹதீஸ்கள் உள்ளன. இதன் படி நாம் ஸலவாத் சொல்லி வருகிறோம். ஆனால் இந்த ஹதீஸ்களில் இடம் பெறும் கஅப் பின் அல்கமா என்பவர் பலவீனமானவர் என்றும் அதனால் பாங்குக்குப் பிறகு ஸலவாத் சொல்லக் கூடாது என்றும் ஒரு அறிஞர் கூறுகின்றார். இது சரியா? பாங்குக்குப் பின் ஸவலாத் சொல்வதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளதா? விளக்கவும்.

நோன்பு திறக்கும் போது ஓதும் துஆ



நோன்பு திறக்கும் துஆ !



மறு ஆய்வு

தமிழகத்தில் நோன்பு துறக்கும் துஆவாக அல்லாஹும்ம லக்க சும்த்து.......... என்று துவங்கும் துஆவை ஓதி வருகிறார்கள். இவ்வாறு ஓதுவது விரும்பத்தக்கது என்று மத்ஹப் நூல்களில் கூறப்பட்டுள்ளது.

அல்லாஹும்ம லக்க சும்த்து... என்ற துஆ பல்வேறு வாசகங்களில் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அபூஹுரைரா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அனஸ் (ரலி), அலீ (ரலி) ஆகிய நான்கு நபித்தோழர்கள் வழியாகவும் முஆத் பின் ஸஹ்ரா என்று ஒரு தாபியி வழியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவை அனைத்தும் பலவீனமான செய்திகளாகும்.

Friday, June 15, 2012

தொழுகையின் அமர்வில் விரலசைத்தல்


தொழுகையின் அமர்வில் விரலசைத்தல்
தொழுகையில் அத்தஹிய்யாத், ஸலவாத் மற்றும் துஆக்களை ஓதுவதற்காக அமரும் போது வலது கையின் ஆட்காட்டி விரலை அசைப்பது நபிவழி என்று நாம் கூறி வருகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாகப் பதிவாகியுள்ள ஹதீஸ்களின் அடிப்படையில் தான் நாம் இதைக் கூறி வருகிறோம்.

இது, தமிழக முஸ்லிம்களுக்கு முன்னர் கேள்விப்படாத ஒரு நடைமுறையாக இருந்ததால் இதற்குக் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

இரண்டாம் ஜமாஅத்



இரண்டாம் ஜமாஅத்

ஹதீஸ்களில் இல்லாத கருத்தை ஹதீஸ்களில் உள்ளது போல் காட்டுவதில் கைதேர்ந்த (தங்க நகை கட்டுரையில் இதை அம்பலப்படுத்தியுள்ளோம்.) இலங்கை நவ்பர் என்பார் ஒரு ஜமாஅத் முடிந்து மற்றொரு ஜமாஅத் நடத்துவது கூடாது என்றும் வாதிட்டு வருகிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஆராய்ச்சிக்குப் பதில் சொல்ல தவ்ஹீத் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ஞானம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளதால் முன்னுரிமை கொடுத்து இதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோம்.

பெருங்கூட்டத்தைப் பின்பற்ற வேண்டுமா!



பெருங்கூட்டத்தைப் பின்பற்ற வேண்டுமா!

பெருங்கூட்டத்தைப் பின்பற்றுங்கள்;எவன் தனித்து விடுகின்றானோ அவன் தனித்து நரகத்தில் போடப்படுவான் என்று மிஷ்காத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸ் அடிப்படையில் மத்ஹபுகளை விட்டு வெளியேறுவது நரகத்திற்குரிய செயல் என்று விளக்கம் தருகிறார்கள். இது உண்மையா?

இந்த ஹதீஸ் இப்னுமாஜாவில் இடம் பெற்றுள்ளதாக மிஷ்காத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்னுமாஜாவில் இடம் பெறும் ஹதீஸ் இது தான்.

நெஞ்சின் மீது கைகளைக் கட்டுதல்

நெஞ்சின் மீது கைகளைக் கட்டுதல்
 வீடியோ ஆடியோ வடிவில் அறிந்து கொள்ள இங்கே கிளிக்  செய்யவும்


பி. ஜைனுல் ஆபிதீன்


தொழுகையில் நிற்கும் போது இடது கையின் மீது வலது கையை வைத்து, இரு கைகளையும் நெஞ்சின் மீது வைக்க வேண்டும் என்று ஆரம்பம் முதல் நாம் கூறி வருகிறோம்.


இந்தியாவில் பெரும்பாலான முஸ்லிம்கள் தொப்புளுக்குக் கீழே கைகளைக் கட்டி தொழுது வருகின்றனர். இது தவறானது என்றும் இந்தக் கருத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து ஹதீஸ்களும் பலவீனமாக உள்ளன என்றும் நாம் கூறி வருகிறோம்.

சூனியம் மறுப்புக்கு மறுப்பு

சூனியம் மறுப்புக்கு மறுப்பு

திருக்குர் ஆனையும் நபிவழியையும் விட்டு விட்டு சலபி எனும் புதுமதஹபுக்கு வக்காலத்து வாங்கப் புறப்பட்டுள்ள அல்ஜன்னத் மாத இதழ் சூனியம் குறித்து மிகப் பெரும் ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. சூனியம் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு கருத்தை முன்வைக்கிறது என்றால் அது குறித்து எடுத்துவைக்கும் ஒவ்வொரு ஆதாரத்துக்கும் ஒவ்வொரு வாதத்தையும் எடுத்துக் காட்டி அதற்கான மறுப்பை எடுத்து வைக்க வேண்டும். அப்படி இல்லாமல் தூரும் இல்லாமல் தலைப்பும் இல்லாமல் ஒரு மறுப்புக் கட்டுரையை எழுதி அதன் மூலம் தனது அறியாமையை தானே தம்பட்டம் அடித்துள்ளது.

சூனியம் பற்றி தவ்ஹீத் ஜமாஅத்தினர் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் என்று கேள்விகளைச் சமாளிப்பதற்காக எதையாவது எழுதி விட்டு நாங்கள் அபோதே இதற்கு பதில் சொல்லி விட்டோம் என்று கூறி சலபி மத்ஹபினரை நம்ப வைக்கவே இந்தக் கட்டுரையை அல்ஜன்னத் வெலீயிட்டுள்ளது.

Thursday, June 14, 2012

தம்புள்ளை பள்ளி இடிப்பும் கோடாரிக்காம்பாய் மாறிப்போன முஸ்லிம் தலைமைகளும் !



“மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும்இ ஆலயங்களும் வழிபாட்டுத்தலங்களும் அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்.” (அல்குர்ஆன் 22 : 40)

மாபொலையில் நடைபெற்ற மார்க்க விளக்க தெருமுனை பிரச்சாரம்!


கடந்த 26.05.2012 அன்று மாபோலை துவ என்ற பகுதியில் மார்க்க விளக்க தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர் ரஸ்மின் எம்.ஐ.எஸ்.ஸி அவர்கள் ‘இது தான் இஸ்லாம்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். பல சகோதர சகோதரிகள் அவ்விடத்திற்கு வந்தும் வீடுகளிலிருந்தும் உரையை கேட்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

அக்குரனையில் தப்லீக் அரக்கர்கள் அராச்சகம் தவ்ஹீத் பிரசாரகர் தாக்கப்பட்டார்!



ஹெம்மதகமை விவாதத்தில் தோல்வியுற்ற தப்லீக் ஜமாஅத் பேச்சை பேச்சால் வெல்ல திறாணியற்றுப் போய் தமது கரங்களால் வெல்ல எத்தனித்து இலங்கையின் பல பகுதிகளிலும் தவ்ஹீத் சகோதரர்களை தாக்கி வருகின்றனர். இது இவர்களின் தோல்வியை இன்னும் வலுப்படுத்துகிறது.

நபியின் சிறுநீரை நபித்தோளியர்கள் குடித்தார்களா ?


குர்ஆனும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் இஸ்லாத்தின் அடிப்படை மூல ஆதாரங்களாகும். குர்ஆனைப் பொறுத்தவரை இன்றைக்கு எது குர்ஆன் என்பதை நாம் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை. நமது ஆய்வுக்கு அப்பாற்பட்ட வகையில் குர்ஆன் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றது.

அக்கரை பற்று அன்சார் மவ்லவிக்கு SLTJ யின் பகிரங்க விவாத அழைப்பு !


அல்லாஹ்வின் திருப்பெயரால்…

“விவேகத்துடனும்,அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக!
அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக!”
அல்குர்ஆன் (16 : 125)

மகளிர்க்கான திரை மார்க்கமா? மரபா?


இலங்கையின் பல்வேறு இடங்களில் மார்க்க நிகழ்ச்சிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடைபெறுகின்றன. ஜும்ஆவும் நடைபெறுகின்றன. இதில் பெண்களும் கலந்து கொள்கின்றனர். சில போது பெண்களுக்கு என்று பிரத்தியேகமான பயான்களும் ஆண்களால் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆண்களை விட்டும் பெண்களை பிரிக்கும் விதமாக திரை போட வேண்டும் என்று சிலரும் திரை போடக்கூடாது என்று சிலரும் கூறுகின்றனர். இதற்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மார்க்கத் தீர்ப்பு என்ன என்பதனை இப்போது நாம் பார்க்க முயல்வோம்.

இலங்கை முஸ்லிம்களை இலக்கு வைக்கும் இனவாத சக்திகள்.

கிட்டிய கால இடைவெளிக்குள் முஸ்லிம்களின் மூன்றாவது இறையில்லம்
இனவாதிகளின்எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு உள்ளாகியுள்ளமை, இலங்கை வாழ் முஸ்லிம்களின் எதிர்கால இருப்புக்கு இனவாதிகள் விடுக்கும் மிகப்பெரும் அபாய சமிக்ஞையாகவே கருதவேண்டியுள்ளது. தம்புள்ளை மஸ்ஜிதுல் கைராத்தில் ஆரம்பித்து, குருநாகல் குர்ஆன் மத்ரஸா வரை சென்று, இன்று தெஹிவளை தாருர் ரஹ்மான் இறையாலயத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் வரை இறையில்ல ஒழிப்பு நடவடிக்கை நீண்டு செல்வது, இந்நாட்டின் பூர்வீகக் குடிகளான முஸ்லிம்களின் கலாசார மையங்களை அழித்து, முஸ்லிம்களின் இருப்புக்கான வரலாற்று சுவடுகளை கூட எச்சங்களாய் மிச்சம் வைக்கக் கூடாது என்ற இனவாத சிந்தனையின் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலை துள்ளியமாய் எடுத்துக்காட்டுகின்றது.

அன்சார் மவ்லவிக்கு sltj வால் அனுப்பப்பட்ட விவாத அழைப்பிதல் கடிதம். .


ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் என்ற நமது அமைப்பு குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களை மாத்திரம் பிரச்சாரம் செய்து வருவது அனைவரும் அறிந்ததே!
ஜமாத்தின் பிரச்சாரத்திற்கு எதிராக கருத்துச் சொல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடன் பகிரங்கமாக கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கு ஜமாத் எந்நேரத்திலும் பின்வாங்கியதில்லை அல்ஹம்துலில்லாஹ்.

வழி கெட்ட சலபிக்கொள்கை!


தமிழகத்தில் சலபி என்ற பெயரில் பகிரங்க வழிகேட்டுக்கு அழைத்து திரியும் கூட்டத்திற்கு அவர்களின் மடமையை அம்பலப்படுத்தி விவாதிக்க அழைத்து பகிரங்க அறைகூவல் விடுக்கும் பிரசுரம் ஒன்று அப்பாஸ் அலி அவர்களால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. இது அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்ற நன்நோக்கோடு எமது தளத்திலும் வெளியிடுகிறோம்.
அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டுமாக.
இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் 23 வருட காலங்கள் பாடுபட்டு அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை மட்டும் உள்ளடக்கிய இஸ்லாத்தை மக்களுக்கு வாழ்க்கை நெறியாக விட்டுச் சென்றுள்ளார்கள். இறைவனுடைய இந்த மார்க்கத்தை நிலைநாட்டுவதற்காக நபி (ஸல்) அவர்களுடன் அவர்களின் அருமைத் தோழர்களும் பெரும்பெரும் தியாகங்களைச் செய்தார்கள்.

முஹைத்தீனை கடவுளாக்கும் மவ்லிதுகள்!


மறைவான ஞானம் தங்கள் இமாம்களுக்கு உண்டு என்று ஷீயாக்கள் நம்புகிறார்கள். அதே போன்று சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்று கூறிக் கொண்டு மவ்லிது ஓதுபவர்களும், மறைவான ஞானம் முஹ்யித்தீனுக்கு உண்டு என்று நம்புகின்றனர். இதற்கு ஆதாரமாக இவர்கள் ஓதி வரும் மவ்லிதுக் கிதாபுகளில் இடம் பெறும் சில சம்பவங்களைக் கடந்த இதழில் பார்த்தோம்.
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானிக்கு மறைவான ஞானம் இருப்பதாகக் கூறும் இன்னொரு சம்பவத்தை அதே மவ்லிதுக் கிதாபிலிருந்து பார்ப்போம்.
அப்துல் ஹக் அறிவிப்பதாவது:
நாங்கள் ஷைகிடம் அமர்ந்திருந்தோம். அவர்கள் காலில் செருப்பணிந்து கொண்டு உளுஃச் செய்து இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள். பிறகு இரு தடவை பெரும் சப்தமிட்டு விட்டுத் தனது இரு செருப்புக்களை விட்டெறிந்தார்கள். அதன் பின் அப்படியே மவுனமாகி விட்டார்கள். என்ன என்று கேட்பதற்கு யாரும் துணியவில்லை. விடையையும் விளக்கத்தையும் தேடியவாறு நாங்கள் வீற்றிருக்கையில் அந்நிய மொழி பேசும் ஒரு வணிகக் கூட்டம் தங்களது நேர்ச்சையோடு வந்தது.
அவர்கள் கொண்டு வந்த நேர்ச்சைப் பொருட்களில் தங்கமும், ஆடைகளும் இருந்தன.