Thursday, June 14, 2012

தம்புள்ளை பள்ளி இடிப்பும் கோடாரிக்காம்பாய் மாறிப்போன முஸ்லிம் தலைமைகளும் !



“மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும்இ ஆலயங்களும் வழிபாட்டுத்தலங்களும் அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்.” (அல்குர்ஆன் 22 : 40)

மாபொலையில் நடைபெற்ற மார்க்க விளக்க தெருமுனை பிரச்சாரம்!


கடந்த 26.05.2012 அன்று மாபோலை துவ என்ற பகுதியில் மார்க்க விளக்க தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர் ரஸ்மின் எம்.ஐ.எஸ்.ஸி அவர்கள் ‘இது தான் இஸ்லாம்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். பல சகோதர சகோதரிகள் அவ்விடத்திற்கு வந்தும் வீடுகளிலிருந்தும் உரையை கேட்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

அக்குரனையில் தப்லீக் அரக்கர்கள் அராச்சகம் தவ்ஹீத் பிரசாரகர் தாக்கப்பட்டார்!



ஹெம்மதகமை விவாதத்தில் தோல்வியுற்ற தப்லீக் ஜமாஅத் பேச்சை பேச்சால் வெல்ல திறாணியற்றுப் போய் தமது கரங்களால் வெல்ல எத்தனித்து இலங்கையின் பல பகுதிகளிலும் தவ்ஹீத் சகோதரர்களை தாக்கி வருகின்றனர். இது இவர்களின் தோல்வியை இன்னும் வலுப்படுத்துகிறது.

நபியின் சிறுநீரை நபித்தோளியர்கள் குடித்தார்களா ?


குர்ஆனும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் இஸ்லாத்தின் அடிப்படை மூல ஆதாரங்களாகும். குர்ஆனைப் பொறுத்தவரை இன்றைக்கு எது குர்ஆன் என்பதை நாம் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை. நமது ஆய்வுக்கு அப்பாற்பட்ட வகையில் குர்ஆன் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றது.

அக்கரை பற்று அன்சார் மவ்லவிக்கு SLTJ யின் பகிரங்க விவாத அழைப்பு !


அல்லாஹ்வின் திருப்பெயரால்…

“விவேகத்துடனும்,அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக!
அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக!”
அல்குர்ஆன் (16 : 125)

மகளிர்க்கான திரை மார்க்கமா? மரபா?


இலங்கையின் பல்வேறு இடங்களில் மார்க்க நிகழ்ச்சிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடைபெறுகின்றன. ஜும்ஆவும் நடைபெறுகின்றன. இதில் பெண்களும் கலந்து கொள்கின்றனர். சில போது பெண்களுக்கு என்று பிரத்தியேகமான பயான்களும் ஆண்களால் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆண்களை விட்டும் பெண்களை பிரிக்கும் விதமாக திரை போட வேண்டும் என்று சிலரும் திரை போடக்கூடாது என்று சிலரும் கூறுகின்றனர். இதற்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மார்க்கத் தீர்ப்பு என்ன என்பதனை இப்போது நாம் பார்க்க முயல்வோம்.

இலங்கை முஸ்லிம்களை இலக்கு வைக்கும் இனவாத சக்திகள்.

கிட்டிய கால இடைவெளிக்குள் முஸ்லிம்களின் மூன்றாவது இறையில்லம்
இனவாதிகளின்எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு உள்ளாகியுள்ளமை, இலங்கை வாழ் முஸ்லிம்களின் எதிர்கால இருப்புக்கு இனவாதிகள் விடுக்கும் மிகப்பெரும் அபாய சமிக்ஞையாகவே கருதவேண்டியுள்ளது. தம்புள்ளை மஸ்ஜிதுல் கைராத்தில் ஆரம்பித்து, குருநாகல் குர்ஆன் மத்ரஸா வரை சென்று, இன்று தெஹிவளை தாருர் ரஹ்மான் இறையாலயத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் வரை இறையில்ல ஒழிப்பு நடவடிக்கை நீண்டு செல்வது, இந்நாட்டின் பூர்வீகக் குடிகளான முஸ்லிம்களின் கலாசார மையங்களை அழித்து, முஸ்லிம்களின் இருப்புக்கான வரலாற்று சுவடுகளை கூட எச்சங்களாய் மிச்சம் வைக்கக் கூடாது என்ற இனவாத சிந்தனையின் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலை துள்ளியமாய் எடுத்துக்காட்டுகின்றது.

அன்சார் மவ்லவிக்கு sltj வால் அனுப்பப்பட்ட விவாத அழைப்பிதல் கடிதம். .


ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் என்ற நமது அமைப்பு குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களை மாத்திரம் பிரச்சாரம் செய்து வருவது அனைவரும் அறிந்ததே!
ஜமாத்தின் பிரச்சாரத்திற்கு எதிராக கருத்துச் சொல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடன் பகிரங்கமாக கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கு ஜமாத் எந்நேரத்திலும் பின்வாங்கியதில்லை அல்ஹம்துலில்லாஹ்.

வழி கெட்ட சலபிக்கொள்கை!


தமிழகத்தில் சலபி என்ற பெயரில் பகிரங்க வழிகேட்டுக்கு அழைத்து திரியும் கூட்டத்திற்கு அவர்களின் மடமையை அம்பலப்படுத்தி விவாதிக்க அழைத்து பகிரங்க அறைகூவல் விடுக்கும் பிரசுரம் ஒன்று அப்பாஸ் அலி அவர்களால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. இது அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் என்ற நன்நோக்கோடு எமது தளத்திலும் வெளியிடுகிறோம்.
அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டுமாக.
இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் 23 வருட காலங்கள் பாடுபட்டு அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை மட்டும் உள்ளடக்கிய இஸ்லாத்தை மக்களுக்கு வாழ்க்கை நெறியாக விட்டுச் சென்றுள்ளார்கள். இறைவனுடைய இந்த மார்க்கத்தை நிலைநாட்டுவதற்காக நபி (ஸல்) அவர்களுடன் அவர்களின் அருமைத் தோழர்களும் பெரும்பெரும் தியாகங்களைச் செய்தார்கள்.

முஹைத்தீனை கடவுளாக்கும் மவ்லிதுகள்!


மறைவான ஞானம் தங்கள் இமாம்களுக்கு உண்டு என்று ஷீயாக்கள் நம்புகிறார்கள். அதே போன்று சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்று கூறிக் கொண்டு மவ்லிது ஓதுபவர்களும், மறைவான ஞானம் முஹ்யித்தீனுக்கு உண்டு என்று நம்புகின்றனர். இதற்கு ஆதாரமாக இவர்கள் ஓதி வரும் மவ்லிதுக் கிதாபுகளில் இடம் பெறும் சில சம்பவங்களைக் கடந்த இதழில் பார்த்தோம்.
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானிக்கு மறைவான ஞானம் இருப்பதாகக் கூறும் இன்னொரு சம்பவத்தை அதே மவ்லிதுக் கிதாபிலிருந்து பார்ப்போம்.
அப்துல் ஹக் அறிவிப்பதாவது:
நாங்கள் ஷைகிடம் அமர்ந்திருந்தோம். அவர்கள் காலில் செருப்பணிந்து கொண்டு உளுஃச் செய்து இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள். பிறகு இரு தடவை பெரும் சப்தமிட்டு விட்டுத் தனது இரு செருப்புக்களை விட்டெறிந்தார்கள். அதன் பின் அப்படியே மவுனமாகி விட்டார்கள். என்ன என்று கேட்பதற்கு யாரும் துணியவில்லை. விடையையும் விளக்கத்தையும் தேடியவாறு நாங்கள் வீற்றிருக்கையில் அந்நிய மொழி பேசும் ஒரு வணிகக் கூட்டம் தங்களது நேர்ச்சையோடு வந்தது.
அவர்கள் கொண்டு வந்த நேர்ச்சைப் பொருட்களில் தங்கமும், ஆடைகளும் இருந்தன.