Thursday, June 14, 2012

அன்சார் மவ்லவிக்கு sltj வால் அனுப்பப்பட்ட விவாத அழைப்பிதல் கடிதம். .


ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் என்ற நமது அமைப்பு குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களை மாத்திரம் பிரச்சாரம் செய்து வருவது அனைவரும் அறிந்ததே!
ஜமாத்தின் பிரச்சாரத்திற்கு எதிராக கருத்துச் சொல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடன் பகிரங்கமாக கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கு ஜமாத் எந்நேரத்திலும் பின்வாங்கியதில்லை அல்ஹம்துலில்லாஹ்.

அந்த வகையில் கடந்த காலங்களில் நமது ஜமாத்தை விமர்சித்தவர்களை பகிரங்க விவாத மேடையில் சந்திப்பதற்கு ஜமாத் அழைப்பு விடுத்ததையும் அன்மையில் தப்லீக் ஜமாஅத்தினருடன் விவாதம் நடத்தியதும் வாசகர்கள் அறிந்திருப்பீர்கள்.
அக்கரைப்பற்றை சேர்ந்த அன்ஸார் தப்லீகி என்பவர் நாடு பூராகவும் எமது ஜமாஅத்தையும் நாம் கொண்டிருக்கும் கொள்கைகளையும் காராசாரமாக விமர்சித்து வருகிறார். நாம் அவருக்கு பல தடவைகள் விவாத அழைப்பும் விடுத்துள்ளோம். அவர் அவற்று பதிலளித்து விவாதிக்க திறாணியற்ற அவர் ஒற்றைப் பரிமாண அவதூறுப் பிரச்சாரத்தை அறையாட்டங்களாக மேற்கொண்டு வருகிறார். நாம் சற்று இரங்கி வந்து மீண்டும் அவரை விவாத கலத்தில் அம்பலமாக ஆட அழைக்கிறோம்.
சகோதரர் அன்ஸார் மவ்லவி அவர்கள் நமது கடிதத்திற்கு பதில் தந்து விவாதிப்பதற்கு சம்மதிக்கும் பட்சத்தில் அவருடன் பகிரங்கமாக விவாதிப்பதற்கு இன்ஷா அல்லாஹ் நாம் தயாராகவே இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
சகோதரர் அன்ஸார் மவ்லவி அவர்களுக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் அனுப்பிய கடிதம்.